Friday 10th of May 2024 11:54:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலையில் விளையாட்டு மைதானத்தை அபகரிக்க ஈபிடிபி முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!

திருகோணமலையில் விளையாட்டு மைதானத்தை அபகரிக்க ஈபிடிபி முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!


திருகோணமலை அனந்தபுரி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் இன்று அடாத்தாக வேலி அமைக்க சிலர் முற்பட்டபோது அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.

மிக நீண்ட காலமாக அனந்தபுரி பகுதியிலுள்ள குறித்த மைதானம் அப்பகுதி இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த மைதானத்திற்கு பின்புறமாக உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காணிக்கு அருகே குறித்த கட்சியினரால் இன்று காலை வேலி அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த கட்சியினருக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முருகல் நிலை ஏற்பட்டிருந்தது.

மைதானம் ஆனது பல அரசியல் தலைமைகளது உதவியுடன் புனரமைக்கப்பட்டு தற்போதும் இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு இருக்க இதனை அபகரிக்க பலர் முற்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மைதானம் இல்லாது போனால் இளைஞர்கள் பிழையான வளிமுறைகளுக்கு உற்படக்கூடும் என்பதால் அவ் மைதானத்தினை மீட்டுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE